முகப்பு
கோப்புப்படம்.
இந்தியா

காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்பு!

கர்நாடகத்தில் காணாமல் போன ஆசிரியையின் உடல், கோயிலுக்கே அருகே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்தியா

காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்பு!

கர்நாடகத்தில் காணாமல் போன ஆசிரியையின் உடல், கோயிலுக்கே அருகே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:15 PM
கோப்புப்படம்.
பகிர்:

கர்நாடகத்தில் காணாமல் போன தனியார் பள்ளி ஆசிரியையின் உடல் கோயிலுக்கு அருகே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

மக்னிக்யாஹல்லி கிராமத்தில் 28 வயதான தனியார் பள்ளி ஆசிரியை தீபிகா வி கோவ்டா, தனது கணவர் மற்றும் 7 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர் மாலை வீடுதிரும்பவில்லை.

இதையடுத்து சனிக்கிழமை கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமை குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிய விசாரித்தபோது, ஒரு இடத்தில் துர்நாற்றமடிப்பதை கவனித்தனர். 

நாற்றமடிக்கும் இடத்திற்கு சென்று தரையை லேசாக தோண்டியபோது காணாமல் போன ஆசிரியையின் துணி கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியையின் உடலை காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். 

சட்டப்பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெரிந்தவர்கள்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் எனக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →