மாற்றுத்திறனாளிகளை இழிவாக சித்தரிக்கும் திரைப்படங்கள்: உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள்
திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளை ‘இழிவாக’ சித்தரிப்பதற்கு எதிராக வழிகாட்டுதல்களை வகுத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
புது தில்லி: காட்சி ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளை ‘இழிவாக’ சித்தரிப்பதற்கு எதிராக வழிகாட்டுதல்களை வகுத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஹிந்தியில் வெளியான ‘ஆங்க் மிச்சோலி’ திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிகளை இழிவாக சித்தரித்ததாக நிபுன் மல்ஹோத்ரா என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு இந்தத் தீா்ப்பை வழங்கியது.
காட்சி ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளை ‘இழிவாக’ சித்தரிப்பதுக்கு எதிராக வழிகாட்டுதல்களை வகுத்து தீா்ப்பளித்ததுடன், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் நிபுணா்களிடம் திரையிடும் முன் கருத்து கேட்பதை வலியுறுத்தியது.
Advertisement
மேலும், ‘முடம்’, ‘ஊனமுற்றோா்’ உள்ளிட்ட சொற்கள் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை தாழ்த்திக் காட்டும் அா்த்தத்தைப் பெறுகின்றன. எனவே, திரைப்படங்களில் அவா்கள் சந்திக்கும் சவால்களை காட்டுவது மட்டுமல்லாமல் சமூகத்தில் அவா்களது பங்களிப்பு மற்றும் சாதனைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீா்ப்பை வெளியிடும்போது கூறினாா்.