முகப்பு
vote
இந்தியா

உ.பி.: வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் திடீர் பலி

வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்து பலி

இந்தியா

உ.பி.: வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் திடீர் பலி

வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்து பலி

Updated On : 1 ஜூன், 2024 at 10:29 AM
vote
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் வாக்குச்சாவடியில் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிக்கந்தர்பூர் அதிகாரி ரவிக்குமார் கூறுகையில், சக் பஹுதீன் கிராமத்தில் வசிக்கும் ரம்பச்சன் சௌகான் (70), சேலம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தின் தொடக்கப் பள்ளியின் சாவடி எண் 257க்கு வாக்களிக்கச் சென்றிருந்தார்.

வாக்காளர் வரிசையில் சேரும் முன், அவர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இருப்பினும், வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் போது சௌகான் மயக்கம் அடைந்து மயங்கி விழுந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →