முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் நரி தாக்கியதில் 9 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் குள்ளநரி தாக்கியதில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 18 ஜனவரி 2026, 11:53 am IST
- File photo | ANI
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் குள்ளநரி தாக்கியதில் 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஜுகைல் கிராமத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குள்ளநரி தாக்கியதில் மூன்று குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வனத்துறை அதிகாரி அவதேஷ் குமார் சிங் கூறுகையில், கிராமத் தலைவரின் ஆரம்ப தகவலின்படி, குள்ளநரி ஒன்று அப்பகுதியில் பலரைத் தாக்கியதாகக் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

எனினும், விரிவான தகவல்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை கிராமத்திற்குச் சென்று நிலைமையை மதிப்பிட்டு குள்ளநரியைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சோபனில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்றார்.

இதனிடையே தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் அமர் சிங் (30), பூல்மதி (20), கோலு (11), சந்தீப் (10), குட்டி (30), பச்சா தேவி (60), ராமதர் (19), அங்குஷ் (5) மற்றும் ஷப்னம் (25) ஆகியோர் ஜுகைல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என சோபன் சுகாதார மைய கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

summary

Forest department teams would visit the village on Sunday to assess the situation and initiate action to capture the animal, Forest Ranger Avadhesh Kumar Singh said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments