வட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்!
வட மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெயில் வாட்டிஎடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்!
வட மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெயில் வாட்டிஎடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மாதத்தின் தொடக்கத்தில் வெப்பம் மேலும் அதிகரித்து நகரத்தின் பெரும்பாலான இடங்களில் அதிபட்ச வெப்பநிலையாக 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது.
இந்த நிலையில், தில்லியில் இன்று(ஜூன் 18) 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், நாளை மேலும் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கு நாளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பிகார் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகளிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 27ஆம் தேதிக்குப் பிறகு வடமாநிலங்களில் வெப்ப அலை குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.