முகப்பு
இந்தியா

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதியின் சடலம் மீட்பு

இந்தியா

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதியின் சடலம் மீட்பு

Updated On : 23 ஜூன், 2024 at 7:22 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

வடக்கு காஷ்மீரின் உரி செக்டரில் உள்ள கோஹல்லான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் நேற்று கவனித்தனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர்.

இதற்கு பாதுகாப்புப்படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகளின் சடலங்கள் எல்லைக்கு அருகில் கிடந்ததால் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினரால் மீட்க முடியவில்லை.

இந்த நிலையில் உரி செக்டார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பயங்கரவாதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேசமயம் பலியான மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்து வருகிறது. இதனால் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →