மத்தியப் பிரதேசம், போபாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தலைநகர் போபலில் உள்ள தலைமைச் செயலகத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த 15 முதல் 20 வரை தீயணைப்பு வாகனங்கள் விரைந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முதல்வர் மோகன் யாதவ் நிலைமையை ஆய்வு செய்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், ஆவணங்களும் முக்கியமான கோப்புகளும் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.