முகப்பு
இந்தியா

சிஏஏ: சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் 2.5 - 3 கோடி வரை சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர்.

Updated On : 13 மார்ச், 2024 at 4:28 PM
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் ஒட்டுமொத்தமாக 2.5 முதல் 3 கோடி வரையிலான சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். இவை ஏழ்மை நாடுகள்.

2.5 முதல் 3 கோடி வரையிலான மக்களில் 1 முதல் 1.5 கோடி மக்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களின் நிலை என்ன? அவர்களை எங்கு தங்கவைப்பது? அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பை ஏற்படுவது எப்படி?

இது பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். கொள்ளையும் பாலியல் குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நம்மைச் சுற்றிலுமே கவர அபாயம் ஏற்படும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை என்னவாகும்? என கேஜரிவால் கேள்வி எழுப்பினார்.

முழு கட்டுரையைப் படிக்க →