இந்தியா

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து 5 பேர் பலி!

DIN

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழையால் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குவதற்காக சுரங்கம் அருகே வீடு கட்டப்பட்டது. கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. தேவையான நடவடிக்கைகளக்குப் பிறகு அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படும்.

கனமழையால் அதே பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பலியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மாகாணத்தின் ஹர்னாயில் ஒரு சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு வெடித்ததில் 12 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பலியான சில நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

தலைமைச் செயலகத்தில் ஸ்ரேயா!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT