இந்தியா

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து 5 பேர் பலி!

நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

DIN

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழையால் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்குவதற்காக சுரங்கம் அருகே வீடு கட்டப்பட்டது. கனமழை காரணமாக நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. தேவையான நடவடிக்கைகளக்குப் பிறகு அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படும்.

கனமழையால் அதே பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பலியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மாகாணத்தின் ஹர்னாயில் ஒரு சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு வெடித்ததில் 12 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பலியான சில நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் புதின்! ஆயுதப்படை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றார் பிரதமர் மோடி!

ஹைதராபாதில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

AVM தோப்பில் நடப்பட்ட சிறு செடி நான்! AVM Saravanan-க்கு கமல் அஞ்சலி!

சிரிக்கும் தும்பைப் பூ.... கெளரி கிஷன்!

அவள் உலக அழகியே... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT