இந்தியா

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும்(நவ. 28) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

அதானி விவகாரம், மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும்(நவ. 28) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை(நவ. 25) தொடங்கியது. இதில் சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட 15 மசோதாக்கள் குறித்து விவாதிக்க அல்லது நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. கடந்த 3 நாள்களாக இரு அவைகளும் முடங்கிய நிலையில் இன்றும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

முதலில் மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

அதேபோல, ஒத்திவைப்புக்குப் பிறகு நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை(நவ. 29) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

30 ஆண்டுகளுக்குப் பின் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்! பக்தர்கள் தரிசனம்!

ராஜஸ்தான்: கண்காட்சியில் கவனம்பெற்ற ரூ.21 கோடி எருமை உயிரிழப்பு

காந்தாராவைப் பணத்துக்காக உருவாக்கவில்லை: ரிஷப் ஷெட்டி

வரலாறு படைக்கப்பட்டுவிட்டது! மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரஜினி வாழ்த்து!

ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு!

SCROLL FOR NEXT