இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி! ஒரு நிமிடத்தில் முடங்கிய மக்களவை!

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒரே நிமிடத்தில் முடங்கியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளியில் மக்களவை அலுவல்கள் முடங்கியுள்ளன.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நேற்று மாலை பேசவிருந்தார்.

ஆனால், எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மோடி பேசுவதற்கு முன்பே, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், சில நொடிகளில் அவையை பகல் 12 வரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அவை கூடியவுடன் பதாகைகளை ஏந்தி அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.

Opposition parties create uproar! Lok Sabha adjourned in one minute!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த சுந்தரி தொடர் நடிகை!

ஸ்கிரைப் நியமனம் சம்பந்தமாக தேர்வுத்துறை இயக்குநரின் சுற்றறிக்கையை ரத்து செய்திடுக: பெ. சண்முகம்

சென்னை - ஜல்பைகுரி ரயில் தடம் புரண்டது!

வங்கதேசத்துக்கு ஆதரவு; இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கிறோம்: பாக். பிரதமர்

இன்று தங்கம் - வெள்ளி விலை குறைவு!

SCROLL FOR NEXT