முகப்பு
இந்தியா

மக்களவை ஒத்திவைப்பு! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம்...

Updated On : 4 பிப்ரவரி 2026, 12:02 pm IST
நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம்
பகிர்:

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் இடைநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை மக்களவை கூடியவுடன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 பேரும், பிரதமர் மோடி சமரசத்துக்கு உள்ளாகிவிட்டார் என்ற பதாகையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார்.

summary

Lok Sabha adjourned! MPs protest in Parliament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.