செய்தியாளர் சந்திப்பில் பவன் கேரா  படம் | எக்ஸ்
இந்தியா

20 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: காங்கிரஸ்

ஹரியாணாவில் 20 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

DIN

ஹரியாணாவில் 20 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஹரியாணா தேர்தலில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் இன்று (அக். 9) சமர்ப்பித்தது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது.

ஹரியாணா தேர்தல் முடிவுகள் கள நிலவரத்துக்கு எதிரானதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ஹரியாணாவில் 20 தொகுதிகளில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 7 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் உடன் சமர்ப்பித்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா பேசியதாவது,

''ஹரியாணா தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. கர்னல், தப்வாலி, ரேவாரி, பானிபட் (நகரம்), ஹூதால், கல்கா மற்றும் நார்னெளல் ஆகிய தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததற்கான ஆதாரத்தை வழங்கியுள்ளோம்.

இது தொடர்பான விசாரணை முடியும்வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீலிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

ஹரியாணாவில் கிடைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் முடிவு. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என அனைத்துத் தரப்பிலும் கூறப்பட்டது'' என பவன் கேரா குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT