முகப்பு
இந்தியா

மும்பை: 14 மாடிக் கட்டடத்தில் தீ; 3 பேர் பலி!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...

Updated On : 16 அக்டோபர், 2024 at 5:47 AM
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு
பகிர்:

மும்பையில் உள்ள 14 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் புதன்கிழமை காலை 3 பேர் உயிரிழந்தனர்.

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ரியா பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் உள்ள வீட்டில், புதன்கிழமை காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வீரர்கள், ஒரு மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.

இந்த விபத்தில், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர்கள் உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →