பிபவ் குமார் 
இந்தியா

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் வைபவ் குமார்!

மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் வைபவ் குமார்.

பிடிஐ

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் வைபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையிலிருந்த வைபவ் குமார், சிறை எண் ஐந்தில் இருந்து மதியம் 2 மணிக்கு விடுவிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 100 நாள்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு, அரசுத் தரப்பு 51-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க முன்வந்துள்ளதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, விசாரணை முடிவடைய காலமாகும் என்று கூறியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், குமாரை விடுவிப்பதால் விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நீதிபதிகள் அமா்வு கூறியது.

கடந்த மே 13 அன்று கேஜரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் குமார் மாலிவாலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மே 18ல் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT