முகப்பு
இந்தியா

தில்லி, வட மாநிலங்களில் நிலநடுக்கம்! மக்கள் அச்சம்

தில்லியில் நில அதிர்வு உணரப்பட்டது பற்றி...

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:31 AM
நிலநடுக்கம் (கோப்புப்படம்)
பகிர்:

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் புதன்கிழமை பகல் 12.58 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8-ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது, பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் உணரப்பட்டதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.

மேலும், அண்டை நாடான ஆப்கன் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சில இடங்களில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, வீடுகள் மற்றும் அலுவகங்களில் இருந்து வெளியே வந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

இரண்டாவது முறை

கடந்த இரண்டு வாரங்களில் தில்லியில் நிலநடுக்கம் உணரப்படுவது இரண்டாவது முறையாகும்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தில்லியில் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →