முகப்பு
இந்தியா

பிகார்: லாரி மீது பேருந்து மோதி மூவர் பலி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நால்வரின் நிலை கவலைக்கிடம்

Updated On : 29 செப்டம்பர் 2024, 9:39 am IST
பகிர்:

பிகாரில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 3 பேர் பலியாகினர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கயாவிலிருந்து பாராபங்கி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, பிகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள மோகனியாவில், நின்று கொண்டிருந்த லாரி மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாக துணைப்பிரிவு காவல் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments