பிரதிப் படம் ENS
இந்தியா

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் காவல் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் பெண் புகார்

DIN

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். புகாரில் அவர் தெரிவித்ததாவது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவத்புரி காவல் நிலையம் அருகே வாகன சோதனைக்காக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, பெண்ணிடம் தலைமை காவலர் அதுல் சௌக்சே தவறாக நடந்து கொண்டதாகவும், அதனை மற்றொரு காவலரான ஜிதேந்திரா விடியோ எடுத்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, காவல் அதிகாரிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்த பெண் மீது தலைமை காவல் அதுல் சௌக்சேவும் புகார் அளித்தார். அவருடைய புகாரில் தெரிவித்ததாவது, தலைக்கவசம் அணியாமல் வந்ததால்தான், அந்தப் பெண் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, தடுத்து நிறுத்தப்பட்டதற்காக தகராறிலும் ஈடுபட்டார் என்று தெரிவித்தனர்.

இருதரப்பினரும் வழக்குப்பதிவு செய்திருப்பதால், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அன்னைக்கே உன்ன தட்டிருக்கணும்” மயிலாடுதுறை ஆணவக்கொலை சம்பவம்: பெண்ணின் தாயார் மிரட்டிய விடியோ!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

“Feel Good, Comedy Film!” குமாரசம்பவம் படம் பற்றி பிரபலங்கள்!

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 போஸ்டர்!

SCROLL FOR NEXT