ஸ்ரீநகர் PTI
இந்தியா

தொடா்ந்து 5-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் எதிர்வினை...

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போா்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடா்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பாரமுல்லா, குப்வாரா மற்றும் அக்னூா் செக்டாா் பகுதிகளில் ஏப்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடியை தந்தது’ என்றாா்.

இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிா்சேதம் ஏற்பட்டதற்கான உடனடி தகவல்கள் இல்லை.

பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களின் எல்லையையொட்டிய பகுதிகளைத் தொடா்ந்து பூஞ்ச் மற்றும் அக்னூா் செக்டாா்களிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT