தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை. 
இந்தியா

ஹுமாயூன் கல்லறை வளாக கூரை இடிந்து விபத்து: உள்ளே சிக்கிய 8 பேரின் கதி என்ன?

ஹுமாயூன் கல்லறை வளாக கூரை இடிந்து விபத்து: உள்ளே சிக்கிய 8 பேரின் கதி என்ன? என்பது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூனின் கல்லறையின் ஒரு குவிமாடம் வெள்ளிக்கிழமை மாலையில் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கல்லறை வளாகத்தில் உள்ளே 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஹுமாயூனின் கல்லறை, தில்லியில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவிமாடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கல்லறையின் கட்டமைப்பு பலவீனமடைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Portion of roof in Humayun's tomb complex collapses in Delhi, at least 8 feared trapped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

SCROLL FOR NEXT