சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து ENS
இந்தியா

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலி

இணையதளச் செய்திப் பிரிவு

மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று (பிப். 5) காலை வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த நிலையில், விபத்தில் 16 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சுரங்கத்தினுள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலத்தில் சட்டவிரோதச் சுரங்கங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் சுரங்கத்தின் உரிமையாளர் அல்லது நடத்துபவர் குறித்த தகவல்களைக் கண்டறிய போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.

16 killed in blast at illegal coal mine in Meghalaya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றம்! - மத்திய அரசு தகவல்!

ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக வாதம்: மமதா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: பாக். கேப்டன்

SCROLL FOR NEXT