இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் கார் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் கார் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் கார் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சர்தல் மாதா கோயிலில் வழிபாடு செய்துவிட்டு குடும்பத்தினர் காரில் சனிக்கிழமை தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கிஷ்த்வார் நகரத்திலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள டிராப்ஷல்லா இணைப்புச் சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் விழுந்தது.

உடனே உள்ளூர்வாசிகள் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஹரித்வார்: மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை கடித்துக் குதறிய எலிகள்

மேலும் பெண் ஒருவர் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Prima facie, the driver of the car lost control while negotiating a blind curve, causing the vehicle to veer off the road and fall into the gorge, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளை நேசிப்பவர்களுக்கு..!

கொழும்பு நினைவலைகள்... தனஸ்ரீ வெர்மா!

உழவா் சந்தையில் கடைகளைத் திறக்காமல் விவாயிகள் போராட்டம்

மேகங்களில் மிதப்பவள்... ருக்மிணி மைத்ரா!

பசுஞ்சோலை பச்சை மயில்... தியா மிர்ஸா!

SCROLL FOR NEXT