நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலி
நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வெடிவிபத்து நிகழ்ந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இதில் 15 பேர் பலியாகினர்.
எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் பிரதிநிதிகள் கூறுகையில், இந்த சம்பவம் நிறுவனத்தின் டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் காலை 7 மணி முதல் காலை 7.15 மணி வரை நடந்தது.
வெடி விபத்து நடந்த உடனேயே காயமடைந்தவர்கள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.