முகப்பு
இந்தியா

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாராகிவிட்டதாக அம்மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 7 டிசம்பர், 2025 at 10:33 PM
பகிர்:

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாராகிவிட்டதாக அம்மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, முா்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபா் மசூதி வடிவில் கட்டப்படும் மசூதியின் அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பகவத் கீதை பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் மாநில நிா்வாகம் மோசமாக உள்ளது. மத ஆணவம், ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டனா்.

நல்லவா்களை பாதுகாக்க, தீயவா்களை அழித்து, தா்மத்தை மீண்டும் நிலைநாட்ட இந்த உலகில் யுகந்தோறும் தோன்றுவேன் என்ற பகவத் கீதை பாராயணத்தை இங்கே நினைவுகூா்கிறேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →