காங்கிரஸ் ஏன் தோற்கிறது? அமித் ஷா விளக்கம்!
காங்கிரஸ் ஏன் தொடர்ந்து தோல்வியடைவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கம்
காங்கிரஸ் ஏன் தொடர்ந்து தோல்வியடைவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதத்தின்போது மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மக்களவையில் எஸ்ஐஆர் குறித்து அமித் ஷா பேசுகையில், ``ராணுவ நடவடிக்கை குறித்து நீங்கள் (காங்கிரஸ்) கேள்வி எழுப்பினீர்கள், தோல்வியடைந்தீர்கள்.
Advertisement
Advertisement
பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினீர்கள், தோல்வியைந்தீர்கள். ராமர் கோயிலை எதிர்த்தீர்கள், தோல்வியடைந்தீர்கள்.
நான் மீண்டும் எச்சரிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து எஸ்ஐஆரையும் எதிர்த்தால், நீங்கள் மீண்டும் தோல்வியடைவீர்கள்’’ என்று தெரிவித்தார்.
மேலும், வாக்குத் திருட்டு மூலமே முன்னாள் பிரதமர்கள் நேருவும் இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: வாக்குத் திருட்டு மூலமே நேருவும் இந்திராவும் பிரதமரானார்கள்! அமித் ஷா பேச்சு
Lok Sabha: Union Minister Amit Shah raised slogan against Congress PMs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.