திருவனந்தபுரத்தில் 45 ஆண்டுகள் வரலாற்றை முறியடித்ததா பாஜக?
கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக தொடர் முன்னிலை
கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தலைநகர் திருவனந்தபுரத்தில் முதன்முறையாக பாஜக முன்னிலை பெற்றது.
கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் கடந்த 45 ஆண்டுகளாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி (எல்டிஎஃப்) வெற்றி பெற்றுவந்த நிலையில், முதன்முறையாக பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
Advertisement
இதுகுறித்து மாநில பாஜக தலைவர்கள் கூறுகையில், "கேரளத்தில் உள்ள ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இது ஒரு வரலாற்று வெற்றி. ஏனெனில், வாக்கு சதவிகிதம் மற்றும் அரசியல் தடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் அடைந்துள்ளோம்.
எல்டிஎஃப், ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் கடினமான மையப் பகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கேரளத்திலிருந்து எல்டிஎஃப் வெளியேற்றப்பட்டதை இது காட்டுகிறது. காங்கிரஸ் மற்றும் எல்டிஎஃப் இருவரும் மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டனர்.
இந்தத் தீர்ப்பு, கம்யூனிஸ்ட் அரசின் ஊழல், சபரிமலை கோயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான மக்களின் பிரதிபலிப்பு.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் போன்ற ஊழல்காரர்களை நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. 45 நாள்களில் பிரதமர் நடவடிக்கையை அறிவிப்பார்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க: மகாத்மா காந்தி பெயரில் என்ன தவறு? நேருவைத் தொடர்ந்து காந்தியையும் வெறுக்கும் பாஜக! - ஜெய்ராம் ரமேஷ்