கைது (கோப்புப்படம்)
இந்தியா

உ.பி.: கோயில்களில் இருந்து பித்தளை மணிகளைத் திருடிய 7 பேர் கைது, 100 மணிகள் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் கோயில்களில் இருந்து பித்தளை மணிகளைத் திருடிய 7 பேரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் கோயில்களில் இருந்து பித்தளை மணிகளைத் திருடிய 7 பேரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹரில் உள்ள கோயில்களில் இருந்து பித்தளை மணிகள் தொடர்ச்சியாக திருடுபோனதாக சமீபத்திய நாள்களில் புகார் எழுந்தது.

இதனைத் தடுக்க அதிகாரி திபாய் மேற்பார்வையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்த குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் வியாழக்கிழமை இரவு ஹம்மு மற்றும் தாஜ் முகமது ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சனிக்கிழமை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், 100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட மணிகளையும் சட்டவிரோத ஆயுதங்களையும் மீட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

கேரள உள்ளாட்சித் தேர்தல்: 4 மாநகராட்சிகளைக் கைப்பற்றும் காங்கிரஸ்! கம்யூ. - 1; என்டிஏ - 1

கைதான ஏழு பேர் கொண்ட கும்பல் புலந்த்ஷாஹர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான அலிகார் மற்றும் ஹத்ராஸில் செயல்பட்டு வந்ததாகவும், ஹத்ராஸ் மற்றும் அலிகார் மாவட்டங்களின் அருகே உள்ள கோயில்களிலும் இதேபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் போலீஸார் கூறினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கைகள் திபாய் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர்(கிராமப்புற) தேஜ்வீர் சிங் கூறினார்.

Uttar Pradesh Police have arrested seven members of a gang involved in stealing brass bells from temples and recovered over 100 stolen bells along with illegal weapons, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT