காங்கிரஸ் எம்பி சுக்தேவ் பகத் 
இந்தியா

பிரதமர் மோடி வெற்று முழக்கங்களை விட தீர்வுகளை முன்வைக்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி!

அரசியல் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

இரட்டை என்ஜின் அரசு இருக்கும்போது பிரதமர் மோடி வெறும் வெற்று முழக்கங்களை விட, தீர்வுகளைப் பற்றிப் பேச வேண்டும் எனக் காங்கிரஸ் எம்பி சுக்தேவ் பகத் கூறினார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் எம்பி,

பிரதமரின் வரலாற்று அறிவு அவருக்கு மட்டுமே புரியும். கிழக்கு நோக்கிய கொள்கை, வெள்ளச் சூழல் மற்றும் அதற்கான நிரந்தரத் தீர்வுகள், அதிகரித்துவரும் வேலையின்மைப் பிரச்னை போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார் எனக் கேள்வி எழுப்பினார.

அஸ்ஸாமின் முக்கியப் பிரமுகரான ஜூபின் கார்க் குறித்தோ, வங்கதேசத்தில் நடந்த முக்கிய சம்பவம் குறித்தோ பிரதமர் மோடி குறிப்பிடாதது குறித்தும் காங்கிரஸ் எம்பி விமர்சித்தார். பழங்குடியினரின் நிலங்கள் மற்று அவற்றின் நிரந்தர நிலை குறித்து பிரதமர் மௌனமாக இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஜிலா பரிஷத் உறுப்பினர் மற்றும் கிராம பரிஷத் உறுப்பினர் தேர்தல்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அருணாச்சலப் பிரதேச மக்கள் நல்லாட்சிக்கான அரசியலுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குகிறார்கள். பாஜக மீது அவர்கள் காட்டிய பாசத்திற்கு அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இது மாநிலத்தின் மாற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எங்கள் உறுதியை வலுப்படுத்துகிறது. மக்களிடையே அயராது உழைத்த பாஜக தொண்டர்களை நான் பாராட்டுகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

Congress MP Sukhdeo Bhagat, on Monday, questioned Prime Minister Narendra Modi's silence on many topics, saying that "If there is a double-engine government, PM Modi should talk about solutions, not just empty slogans..."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு வாருங்கள்! வங்கதேச புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு மோடி அழைப்பு!

ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி படத்தின் 225-வது நாள்! ரசிகர்களோடு படம் பார்த்த இபிஎஸ்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20 வரை நடைபெறும்! - அப்பாவு

2030க்குள் 33% மின்சாரப் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு உரிமை உள்ளது! - Thirumavalavan | VCK | India alliance

SCROLL FOR NEXT