முகப்பு
இந்தியா

ஜம்மு: பாகிஸ்தான் தாக்குதலில் 8 வீரர்கள் காயம்

ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

Updated On : 10 மே, 2025 at 5:02 PM
கோப்புப்படம்.
பகிர்:

ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் சனிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் 8 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.எஸ். புரா செக்டரில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர்.

Advertisement

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி..! மகிழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு வெகுமதி!

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ராணுவ மருத்துவ மையத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

ஜம்முவில் 2,000 கி.மீ. நீளமுள்ள சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியில் பிஎஸ்எஃப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ள காஷ்மீர் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.