கோப்புப் படம் 
இந்தியா

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் நிங்தௌ பரேங் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த தடைசெய்யப்பட்ட பீப்பள்ஸ் லிபரேஷன் ஆர்மி எனும் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தௌபல் மாவட்டத்தில் காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், கிழக்கு இம்பாலில் கே.சி.பி. எனும் இயக்கத்தில் பணியாற்றிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், மேற்கு இம்பால் மாவட்டத்திலும் கே.சி.பி. - பி.எஸ்.சி. அமைப்பில் செயல்பட்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கைகள் அனைத்தும், கடந்த மே 19 மற்றும் மே 20 ஆகிய இருநாள்களில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அதன் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: மல்லிகாா்ஜுன காா்கே

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா!

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம் 27.11.25

வெளிநாட்டு சமூக ஊடகம் மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்தை பரப்புகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

புதுச்சேரியில் குழந்தைத் திருமண எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT