முற்போக்கான சீர்திருத்தம்! புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது குறித்து பிரதமர் மோடியின் கருத்து...
இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் முற்போக்கான சீர்திருத்தங்களில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்களை இன்று (நவ. 21) முதல் நடைமுறைப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, முன்பு நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களையும் ஒருங்கிணைத்து ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு எனும் 4 புதிய சட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்தப் புதிய தொழிலாளர் சட்டங்களானது இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து கொண்டுவரப்பட்ட முற்போக்கான சீர்திருத்தங்களில் ஒன்று என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டதாவது:
“இன்று நமது அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர்கள் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இவை, நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இந்தப் புதிய குறியீடுகள் மூலம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நேரத்தில் ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பிகாரில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு! உள் துறையை விட்டுக்கொடுத்த நிதீஷ் குமார்
PM Modi has said that the new labor laws that have come into effect are one of the most progressive reforms brought about after independence.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.