தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்
பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பற்றிய பாடம் இடம்பெறுவது தொடர்பாக...
தில்லியிலுள்ள பள்ளிக் கல்வித் திட்டத்தில் ராஷ்ட்ரநீதி என்ற பெயரில் ராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) பற்றியும் அதன் பங்களிப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்தும் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நெறிமுறை நிர்வாகம் மற்றும் தேசிய பெருமையை அறிந்துகொள்ளும் நோக்கத்திலும் இதனைக் கொண்டுவரவுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் தில்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு இன்று (அக். 1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்வையொட்டிப் பேசிய தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட்,
''நாட்டின் வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். போன்று பல்வேறு அமைப்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. மாணவர்களிடையே குடிமை மற்றும் சமூக உணர்வை ஏற்படுத்துவது நமது கடமை. பாஜகவின் சித்தாந்த ஆதாரமான ஆர்.எஸ்.எஸ்., உலகின் மிகப்பழமையான அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத பங்காற்றியுள்ளது. ராஷ்ட்ரநீதி என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளது.
இதனால், தில்லியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் ராஷ்ட்ரநீதி பாடம் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனுபவக் கற்றல் முறை மூலம் மாணவர்களுக்கு இது கற்பிக்கப்படும்.
மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு, நெறிமுறை நிர்வாகம் மற்றும் தேசிய பெருமை வளர்க்கும் நோக்கத்தில் இதனைக் கொண்டுவரவுள்ளோம். இது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. சனிக்கிழமைதோறும் இப்பாடம் மாணவர்களுக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்
Delhi govt schools likely to get lessons on RSS history, says education minister
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.