கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் முதல்வர் சித்தராமையா. (கோப்புப் படம்)
இந்தியா

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

5 ஆண்டுகளும் கர்நாடகத்தின் முதல்வராக நான்தான் பதவி வகிப்பேன் என சித்தராமையா கூறியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் தான் மட்டுமே பதவி வகிப்பேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசில், துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவி வகிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனவும், டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயர்த்தப்படுவார் எனவும் அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இதில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வரும் நவம்பர் மாதம் இரண்டரை ஆண்டுகளை நிறைவுச் செய்யும் நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஹெச்.டி. ரங்கநாத் மற்றும் முன்னாள் எம்.பி. எல்.ஆர். சிவராமே கவுடா ஆகியோர் டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்வராகப் பதவியேற்பார் எனக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

“அனைவரும் நவம்பர் புரட்சியைக் குறித்து பேசிவருகிறார்கள் 5 ஆண்டுகள் முழுவதும் நான்தான் முதல்வராகப் பதவி வகிப்பேன். ஆனால், உயர் தலைவர்கள் என்ன முடிவு செய்கின்றார்களோ அதன்படியே நாம் நடக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் சித்தராமையா 5 ஆண்டுகள் தனது பதவியை நிறைவு செய்யமாட்டார் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், கடந்த 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் சித்தராமையா கர்நாடகத்தின் முதல்வராகப் பதவி விகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

Karnataka Chief Minister Siddaramaiah has stated that he will be the only person to hold the post of Chief Minister for the entire five-year term.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

SCROLL FOR NEXT