முகப்பு
இந்தியா

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

5 ஆண்டுகளும் கர்நாடகத்தின் முதல்வராக நான்தான் பதவி வகிப்பேன் என சித்தராமையா கூறியுள்ளது குறித்து...

Updated On : 1 அக்டோபர் 2025, 7:48 pm IST
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் முதல்வர் சித்தராமையா. - (கோப்புப் படம்)
பகிர்:

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் தான் மட்டுமே பதவி வகிப்பேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசில், துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவி வகிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனவும், டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயர்த்தப்படுவார் எனவும் அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வருகின்றன.

Advertisement

Advertisement

இதில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வரும் நவம்பர் மாதம் இரண்டரை ஆண்டுகளை நிறைவுச் செய்யும் நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஹெச்.டி. ரங்கநாத் மற்றும் முன்னாள் எம்.பி. எல்.ஆர். சிவராமே கவுடா ஆகியோர் டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்வராகப் பதவியேற்பார் எனக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

“அனைவரும் நவம்பர் புரட்சியைக் குறித்து பேசிவருகிறார்கள் 5 ஆண்டுகள் முழுவதும் நான்தான் முதல்வராகப் பதவி வகிப்பேன். ஆனால், உயர் தலைவர்கள் என்ன முடிவு செய்கின்றார்களோ அதன்படியே நாம் நடக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் சித்தராமையா 5 ஆண்டுகள் தனது பதவியை நிறைவு செய்யமாட்டார் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், கடந்த 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் சித்தராமையா கர்நாடகத்தின் முதல்வராகப் பதவி விகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

summary

Karnataka Chief Minister Siddaramaiah has stated that he will be the only person to hold the post of Chief Minister for the entire five-year term.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments