FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

17 அக்டோபர் 2025, 9:51 pm IST
பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர். - ANI
பகிர்:

தில்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாட்டில் ஒத்துழைப்பு, மீனவர்கள் நலன் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்தார்.

Advertisement

Advertisement

ஆப்கனில் நிலநடுக்கம்..! ஒரே நாளில் 2 ஆவது முறை!

அப்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாம் இலங்கையில் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

மேலும் ஒத்துழைப்பிற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கி அதிபர் அநுர குமார திசநாயகவுடன் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யா வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

PM Modi on Friday (October 17, 2025) discussed a range of issues such as development cooperation and the welfare of Indian fishermen with Sri Lankan Prime Minister Harini Amarasuriya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments