காங்கிரஸில் இணைந்தார் பாட்டியாலா முன்னாள் மேயர் சஞ்சீவ் சர்மா
பாஜக தலைவரும் பாட்டியாலா முன்னாள் மேயருமான சஞ்சீவ் சர்மா பிட்டு ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸில் இணைந்தார்.
பாஜக தலைவரும் பாட்டியாலா முன்னாள் மேயருமான சஞ்சீவ் சர்மா பிட்டு ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸில் இணைந்தார்.
தலைநகர் தில்லியில் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் அவர் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆட்சியின்போது பாட்டியாலா மேயராக சஞ்சீவ் சர்மா பதவி வகித்தார்.
பாட்டியாலா நகராட்சித் தேர்தலின் போது நகராட்சி கவுன்சிலராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் மேயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
Advertisement
Advertisement
எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது: ஆர்.பி.உதயகுமார்
காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், பாட்டியாலாவின் முன்னாள் மேயரான சஞ்சீவ் சர்மா, இன்று காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் பூபேஷ் பாகேல் முன்னிலையில் அகில இந்திய காங்கிரஸில் இணைந்தார் என்று தெரிவித்துள்ளது.
சஞ்சீவ் சர்மா 2022 பஞ்சாப் தேர்தலில் பாட்டியாலா கிராமப்புற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் பல்பீர் சிங்கிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
BJP leader and former Patiala mayor Sanjeev Sharma Bittu joined the Congress on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.