கோப்புப் படம் 
இந்தியா

எரிபொருள் கசிந்ததால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்!

கொல்கத்தா - ஸ்ரீநகர் இண்டிகோ பயணிகள் விமானத்தில் எரிபொருள் கசிந்தது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தாவிலிருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானத்தில் எரிபொருள் கசிந்ததால் வாரணாசியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்தே எரிபொருள் கசிந்ததை விமானப் பணியாளர்கள் கண்டறிந்ததால், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 6இ-6961 என்ற பயணிகள் விமானம் இன்று மாலை 4.10 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

166 பயணிகளுடன் சென்ற விமானத்தில் எரிபொருள் கசிந்துள்ளது. இதனை விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்தே விமானிகள் கண்டறிந்ததால், வாரணாசி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினர்.

விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என இண்டிகோ தெரிவித்துள்ளது.

விமானத்தில் எரிபொருள் கசிந்ததை கண்டவுடன், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு அவசரத் தரையிறக்கம் குறித்து விமானிகள் கூறியுள்ளனர். உடனடியாக அனுமதி கிடைத்தவுடன் விமானத்தை வாரணாசியில் தரையிறக்கியுள்ளனர்.

இதையும் படிக்க | பிகார் தேர்தல்: தேஜஸ்வி முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில் அளிக்க மறுப்பு

IndiGo Kolkata-Srinagar flight makes emergency landing in Varanasi due to fuel leak

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் விளைச்சல் அதிகரிப்பால் 3 மடங்கு கூடுதல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி பேட்டி

நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகளுக்கு கண்ணீா் தீபாவளி: எடப்பாடி பழனிசாமி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

பூதலூரில் 58.4 மி.மீ. மழை

நெல் கொள்முதல் பிரச்னைக்கு முன்னேற்பாடு இல்லாததே காரணம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

SCROLL FOR NEXT