நீதிமன்றம்  கோப்புப்படம்.
இந்தியா

ம.பி.யில் நீதிபதி வீட்டைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

மத்தியப் பிரதேசத்தில் நீதிபதியின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

மத்தியப் பிரதேசத்தில் நீதிபதியின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியதோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதி அமன்தீப் சிங் சாப்ராவின் வீட்டை சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். அத்துடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக அவர் பாலுமடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில், தானும் தனது குடும்பத்தினரும் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வீட்டிற்கு வந்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார். பிறகு வீட்டின் வாயிலில் இருந்த விளக்கு மற்றும் இரும்பு சாதனங்கள் உள்ளிட்ட சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும், முற்றத்திலும் கற்களை வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்தத் தாக்குதல் சமீபத்திய நீதிமன்ற உத்தரவுடன் தொடர்புடையதா என்பதையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

நெல் கொள்முதல் விவகாரம்: இபிஎஸ் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

Judicial Magistrate First Class (JMFC) Amandeep Singh Chhabra lodged a complaint stating that he and his family were asleep when a group of people arrived at his residence, hurled abuses, and threatened to kill him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.எல்.விஜய் இயக்கும் காதல் ரீசெட் ரிப்பீட் பட டைட்டில் டீஸர்

'தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்'

சொல்லாமல் செல்வர்

மனதுக்கினிய... ரகுல் ப்ரீத் சிங்!

திறந்த விழிகளில்... நிகிதா சர்மா!

SCROLL FOR NEXT