கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு
கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியிலிருந்து காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயில் இந்தூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. பீம்சென் ரயில் நிலையம் அருகே இரவு 9 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அதன் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ரயிலின் முதல் ஏசி பெட்டி ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின் விடியோ சமூகஇணையதளங்களில் வெளியானது. விடியோவில், உடைந்த கண்ணாடி தரையில் கிடப்பதைக் காணலாம். பீம்சென் நிலைய அதிகாரி ஹேமந்த் கூறுகையில், இந்த சம்பவம் ஒரு தவறான செயல்.
Advertisement
Advertisement
இதுவரை பெரிய சதித்திட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிந்து கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்தார்.
Unidentified persons allegedly pelted stones at the Kashi Mahakal Express near Bhimsen railway station here, damaging a window of a First AC coach and causing panic among passengers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.