கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு
கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியிலிருந்து காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயில் இந்தூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. பீம்சென் ரயில் நிலையம் அருகே இரவு 9 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அதன் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ரயிலின் முதல் ஏசி பெட்டி ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின் விடியோ சமூகஇணையதளங்களில் வெளியானது. விடியோவில், உடைந்த கண்ணாடி தரையில் கிடப்பதைக் காணலாம். பீம்சென் நிலைய அதிகாரி ஹேமந்த் கூறுகையில், இந்த சம்பவம் ஒரு தவறான செயல்.
Advertisement
இதுவரை பெரிய சதித்திட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றார். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிந்து கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்தார்.