கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கடந்த அக்.27 ஆம் தேதியன்று கடும் காய்ச்சல் மற்றும் முதுகு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை, கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (அக். 30) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தாவர்சந்த் கெலாட் சமீபத்தில் அவரது சொந்த மாநிலத்துக்குச் சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மணிப்பூரில் புதியதாக 129 பேருக்கு டெங்கு! 4000-ஐ நெருங்கும் பாதிப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.