இந்தியா

கரூர் பலி: கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் இரங்கல்!

இந்தியாவின் கவனத்தை திசைதிருப்பிய கரூர்: பலியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்களுக்கு கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39-ஐ தொட்டுவிட்டது. இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. பலருக்கு கயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய அளவில் பல தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மட்டுமில்லாது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர்கள் ஜெ. பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Karur deaths: Many leaders, including the Chief Ministers of Kerala, Karnataka, and Andhra Pradesh, offer condolences!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அரசியல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நடைபயணம்: வைகோ

வாசுதேவநல்லூா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

குரியன்விளை கோயிலில் அம்மனுக்கு இளநீா் அபிஷேகம்

கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆவின் பாலகம் திறப்பு

SCROLL FOR NEXT