இந்தியாவையும் சீனாவையும் பிரிக்க முடியாது: தூதரக உறவு குறித்து சீனா பெருமிதம்!
இந்திய-சீன தூதரக உறவு 76 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது பற்றி...
இந்தியாவையும் சீனாவையும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டு இந்திய-சீன தூதரக உறவு இன்றுடன்(ஏப்.1) 76 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைப் பற்றி சீன அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
77-ஆவது ஆண்டில் இந்திய-சீன தூதரக உறவு அடியெடுத்து வைத்துள்ளதையடுத்து, இது குறித்து, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹாங்க் புதன்கிழமை(ஏப். 1) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘சீனாவும் இந்தியாவும் பிரிக்க முடியாத அண்டை நாடுகள். ஒருவருக்கொருவர் வெற்றியடைய உதவி செய்வதில் நல்ல அண்டை நாட்டு நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் திகழ்வதே இருவருக்குமான நல்ல தேர்வாக அமையும்.
இந்தியாவுடன் மூலோபய ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது. அதேபோல, செய்முறை ஒத்துழைப்பிலும், மக்களுக்கிடையிலான பரஸ்பர விவகார மேம்படுத்துதலிலும், தெற்கு உலகின் மேம்பாட்டை முன்னெடுக்க பல்முனை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் இந்தியாவுடன் ஒருங்கே செயல்பட சீனா தயார்’ என்று தெரிவித்துள்ளார்.