ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!
எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வால், ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரலாம்.
விமானங்களுக்கான எரிபொருள் விலையை 25 சதவிகிதம் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், விமான டிக்கெட்டில் உள்ள எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா உயர்த்தியிருக்கிறது.
ஈரான் மீதான போர் காரணமாக, உலகம் முழுவதும் விமானங்களுக்கான எரிபொருள்கள் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ஏர் இந்தியா விமானங்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணங்களுக்கான விலையில் எரிபொருள் கூடுதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இது பெரும்பலான பாதைகளில் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வு ஏப். 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement