முகப்பு
உலகம்

கென்யா- எரிபொருள் விலை உயா்வு போராட்டம் வாபஸ்: வன்முறையில் 4 போ் உயிரிழப்பு

கென்யாவில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து பொதுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Updated On : 20 மே 2026, 3:04 am IST
பகிர்:

கென்யாவில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து பொதுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கென்யாவில் அண்மையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை முறையே 23.5 மற்றும் 8 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, போராட்டம் வெடித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து முடங்கி, பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 348 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஒரு வாரத்தில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement