கேரளத்தில் கடன் சுமை காரணமாக மாநில விருது வென்ற விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செருபுழாவில் 62 வயதான விவசாயி கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பலியானவர் செருபுழா அருகே உள்ள இடவரத்தைச் சேர்ந்த அம்பட்டு எலியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த எலியாஸ், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவரது பண்ணையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பலியானார்.
பல லட்சம் ரூபாய் அளவிலான நிதிச் சுமைகளே அவரை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எலியாஸ், கடந்த நாற்பது ஆண்டுகளாக கண்ணூர் மற்றும் அண்டை மாவட்டமான காசர்கோடு மலைப்பகுதிகளில் குத்தகை நிலத்தில் காய்கறி பயிரிட்டு வந்தார்.
இந்த பருவத்திலும் அவர் சுமார் 2,500 வாழைக்கன்றுகளை நட்டியிருந்தார். ஆனால் விளைச்சலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காததால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.