ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால் 50 விமானங்கள் ரத்து ANI
இந்தியா

ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால் 50 விமானங்கள் ரத்து! சுற்றுலாப் பயணிகள் அவதி!

கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகரின் பன்னாட்டு விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால், ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 50 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், குளிர்காலம் உச்சத்தை நெருங்கியுள்ளதால் தலைநகரமான ஸ்ரீநகரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்டுள்ள ஸ்ரீநகரில் பெரும்பாலான போக்குவரத்து வசதிகள் கடும் பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (ஜன. 27) 50 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மோசமான வானிலையின் காரணமாக அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 25 விமானங்களும் 25 விமானங்களின் வருகையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், குடியரசு நாள் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஜம்மு - காஷ்மீர் சென்ற நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Due to heavy snowfall in Jammu and Kashmir, the operation of 50 flights has been cancelled at Srinagar International Airport.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... தீராத நோய்களை தீர்த்தருளும் திருக்காறாயில் கண்ணாயிரநாதர்!

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா ராகுல்? பாஜக குற்றச்சாட்டும், காங்கிரஸ் பதிலும்!

விஜய் தேவரகொண்டா - 14 படத்தின் அறிவிப்பு டீசர்!

மகளிர் விடியல் பயணம்! பிங்க் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடக்கிவைத்த முதல்வர்!

வெள்ளி கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் உயர்வு: தங்கம் விலை குறைவு!

SCROLL FOR NEXT