ஸ்ரீநகரில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 9 வீரர்கள் காயம்
ஸ்ரீநகரில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான அகமதுநகரில் உள்ள டேக்போரா-உமர்ஹைர் சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 9 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
காயமடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் கௌராவில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் ஸ்ரீநகரில் சிறிது பரபரப்பு நிலவியது.
summary