ஸ்ரீநகரில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான அகமதுநகரில் உள்ள டேக்போரா-உமர்ஹைர் சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 9 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் கௌராவில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் ஸ்ரீநகரில் சிறிது பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.