முகப்பு
இந்தியா

சிக்கிமில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து...

Updated On : 22 மார்ச், 2026 at 7:33 AM
நிலநடுக்கம் - பிரதிப் படம்
பகிர்:

சிக்கிமின் மாங்கன் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 8.41 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

4.1 ரிக்டர் அளவில், பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் குறைந்த அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அதிர்வுகள் உணரப்பட்டபோதிலும், உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முன்னதாக, சிக்கிமில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20_ அன்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

An earthquake struck Sikkim's Mangan district at 8.41 pm on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.