தந்தை வெட்டிக் கொலை: மகனுக்கு ஆயுள் சிறை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பசுக்கிடைவிளையைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவருக்கு சின்னக்கண்ணு என்ற சின்னகண்ணன் (29) உள்பட 5 குழந்தைகள். மனைவியுடன்
தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பசுக்கிடைவிளையைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவருக்கு சின்னக்கண்ணு என்ற சின்னகண்ணன் (29) உள்பட 5 குழந்தைகள். மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், முத்துக்குட்டி தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 2-4-2014 அன்று முத்துக்குட்டிக்கும், சின்னகண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே முத்துக்குட்டி இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து சின்னகண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட சின்னகண்ணனுக்கு ஆயுள் சிறைதண்டனையும், ரூ.7 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.இவ் வழக்கில் போலீஸார் தரப்பில், திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் அரசு வழக்குரைஞர் சிவலிங்கமுத்து ஆஜரானார்.