முதல்வரை அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் மீது வழக்கு
தி.மு.க. பேச்சாளராக இருப்பவர் கரூர் முரளி. இவர், திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் கடந்த 11-10-2013 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்ரை அவதூறாக பேசியதாகக்
தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் மீது திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தி.மு.க. பேச்சாளராக இருப்பவர் கரூர் முரளி. இவர், திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் கடந்த 11-10-2013 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்ரை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் அரசு வழக்குரைஞர் என்.சிவலிங்கமுத்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதி நசீர்அகமது விசாரித்து, இந்த வழக்கை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டார்.