நெல்லை அருகே லாரி ஓட்டுநர் கொலை
சுத்தமல்லி அருகேயுள்ள சங்கரன்திரடு கிராமத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தலைத்துண்டித்த நிலையில் சனிக்கிழமை காலையில்
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே லாரி ஓட்டுநர் தலைத்துண்டித்து சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
சுத்தமல்லி அருகேயுள்ள சங்கரன்திரடு கிராமத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தலைத்துண்டித்த நிலையில் சனிக்கிழமை காலையில் கிடந்தது. சடலத்தின் அருகே பைக்கும் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் சுத்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் சடலமாகக் கிடந்தவர், பார்வதியாபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் இளையராஜா (35) என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநரான இவர், வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் பைக்கில் வெளியே சென்றாராம். பின்னர் வீடுதிரும்பவில்லையாம். வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் அவரை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சங்கன்திரடு, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.